கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
இயற்கையே இன்பம்!
அன்னை போலே இயற்கை இருக்க
என்ன துன்பம் எதுவாய் இருப்பினும்
நின்று ரசிக்க நிதர்சனம் இயற்கையே
இறைவன் படைப்பில் இயற்கை நன்றே
குறைகள் இல்லை குவலயம் மகிழ
நிறைவாய்த் தந்தார் நிம்மதி உண்டே!
மலர்கள் அழகு மனத்தில் மகிழ்ச்சி
பலவகை இனங்கள் பாரினில் கண்டோம்
உலகமும் உவக்க உகந்தது இயற்கையே
மல்லிகை மலரும் மயக்கமும் தருமே சொல்லிட முடியா சுகந்திரம் வீசும்
நல்லதோர் மலரே நங்கைகள் அணியே
முல்லைக் கொடியும் முற்றம் படர்ந்து
எல்லை இல்லா இன்பம் தருமே
சொல்லிக் அடங்கா சொர்க்கம் அதுவே!
அருவியின் ஓசை அகத்தினை நிறைக்கும்
குருவிகள் கூடிக் குளிப்பதும் அழகே
தருக்களும் ஆங்கு தந்திடும் சுகமே
வியக்கும் வகையில் விரிந்தே இருக்கும்
பயக்கும் நன்மை பாரில் அதிகம்
இயற்கை சோலை இங்கிதம் ஆகுமே!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading