16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
சக்தி சிறினிசங்கர்
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
இயற்கையே இன்பம்!
அன்னை போலே இயற்கை இருக்க
என்ன துன்பம் எதுவாய் இருப்பினும்
நின்று ரசிக்க நிதர்சனம் இயற்கையே
இறைவன் படைப்பில் இயற்கை நன்றே
குறைகள் இல்லை குவலயம் மகிழ
நிறைவாய்த் தந்தார் நிம்மதி உண்டே!
மலர்கள் அழகு மனத்தில் மகிழ்ச்சி
பலவகை இனங்கள் பாரினில் கண்டோம்
உலகமும் உவக்க உகந்தது இயற்கையே
மல்லிகை மலரும் மயக்கமும் தருமே சொல்லிட முடியா சுகந்திரம் வீசும்
நல்லதோர் மலரே நங்கைகள் அணியே
முல்லைக் கொடியும் முற்றம் படர்ந்து
எல்லை இல்லா இன்பம் தருமே
சொல்லிக் அடங்கா சொர்க்கம் அதுவே!
அருவியின் ஓசை அகத்தினை நிறைக்கும்
குருவிகள் கூடிக் குளிப்பதும் அழகே
தருக்களும் ஆங்கு தந்திடும் சுகமே
வியக்கும் வகையில் விரிந்தே இருக்கும்
பயக்கும் நன்மை பாரில் அதிகம்
இயற்கை சோலை இங்கிதம் ஆகுமே!
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
18
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ...
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...