சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
கவித்தலைப்பு
பசி!

பசியில்லை என்ற குழந்தைக்கு
பலவகை உணவு படைக்கிறான் ஒரு தந்தை
பசி பசி என்று அழுகின்ற குழந்தையின்
வயிற்றுப்பசியைத் தீர்க்க வழியில்லாமல் திண்டாடுகிறான் இன்னொரு தந்தை ! ஏனிந்த ஏற்றம் இறக்கம்
மாற்றம் வருமா மறுவாழ்வு கிடைக்குமா?

ஒரு நிமிடம் குறும்பட உருவாக்கம்
உருகத்தான் வைக்குமா உள்ளங்களை?
நிறைந்த கருத்து அறைந்து செல்லும் அவனவன் அகத்தினை
முன்னுதாரணமாய்
மனிதநேயம் மிக்க மக்கள்
புனிதராய் ஆவர்!
நனிசிறந்த நற்பணி
நல்லுலகம் படைக்குமே!

அற்றவர் பசி ஆற்றி
உயிர்களைக் காப்பாற்றி
இறைவனைக் காண்போம்!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு
வாழ்த்துகளும் நன்றியும் உரித்தாகுக!
திரு.திருமதி . நடா மோகன் அவர்களுக்கும் பெருநன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading