கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு தாயகத்தில் தனி உறவு ஐந்துபத்து வயதில் ஆட்டம்போட்ட நாட்டுல நொந்துமனம் விட்டுதான் நாட்டை விட்டோம் ரோட்டில ஆண்டுகள் முப்பது அண்டைநாடு அடைக்கலம் வேண்டினோம் விரும்பினோம் வேதனையோ குறையல சொந்தநாட்டு சொந்தமொன்று சோகத்தோடு காட்டுல வெந்து வெந்துவழியின்றி வேதனையில் தவிக்குதாம் நீச்சலடித்த ஆற்றிலே நீர் குறைந்து விட்டதாம் பாச்சலிட்ட பதுங்குகுழி பாதை மறந்து போனதாம் கூடுகட்டி வாழ்ந்த சொந்தம் கூண்டோடு பெயர்ந்ததாம் வீடுகட்டி வாழ்ந்திடும் வாழ்வுநிலை இல்லையாம் ஊருக்குள்ள அகதி என்று ஒரு கூட்டம் பேசுதாம் பேருக்காக வந்ததாக பெரும்வதந்தி பரப்புதாம் சொந்த நாடு வந்தாலும் சோதனை கோலமென்று சிந்தாத கண்ணீரை சிந்திமனம் நோகுதாம் என்றுதீரும் சோகமென்று என்சொந்தம் பாடுது ஒன்றாய் கூடிவாழ்ந்த உறவுகளை நாடுது தாயக தீவினில் தனிஉறவு கூடது மாய உலகினில் மனிதனை தேடுது நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு தாயகத்தில் தனி உறவு

ஐந்துபத்து வயதில் ஆட்டம்போட்ட நாட்டுல நொந்துமனம்
விட்டுதான்
நாட்டை விட்டோம் ரோட்டில
ஆண்டுகள் முப்பது அண்டைநாடு அடைக்கலம் வேண்டினோம் விரும்பினோம் வேதனையோ குறையல

சொந்தநாட்டு சொந்தமொன்று சோகத்தோடு காட்டுல வெந்து வெந்துவழியின்றி வேதனையில் தவிக்குதாம்
நீச்சலடித்த ஆற்றிலே நீர் குறைந்து விட்டதாம் பாச்சலிட்ட பதுங்குகுழி பாதை மறந்து போனதாம்
கூடுகட்டி வாழ்ந்த சொந்தம் கூண்டோடு பெயர்ந்ததாம்
வீடுகட்டி வாழ்ந்திடும் வாழ்வுநிலை இல்லையாம்

ஊருக்குள்ள அகதி என்று ஒரு கூட்டம்
பேசுதாம்
பேருக்காக வந்ததாக பெரும்வதந்தி
பரப்புதாம்
சொந்த நாடு வந்தாலும் சோதனை கோலமென்று சிந்தாத கண்ணீரை சிந்திமனம் நோகுதாம்

என்றுதீரும் சோகமென்று
என்சொந்தம் பாடுது ஒன்றாய் கூடிவாழ்ந்த உறவுகளை நாடுது
தாயக தீவினில்
தனிஉறவு கூடது
மாய உலகினில்
மனிதனை தேடுது

நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading