புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சர்வேஸ்வரி கதிரித்தம்பி

ஏராளம்…

ஏர்பூட்டி உழுத விளைநிலம்…..
பலபல விதைகள்
விதைத்த நிலம்…
வியப்போடு விழிகள் அகல பார்போற்றி மகிழும் பசுமை நிலம்….
சொற்களுக்குள்
அடக்கிட முடியா
பெரும் விருட்சமாக பரந்த நிலம்…
ஆக்கிவைத்த வாரிசுகள் அன்னைமொழியில் தேனமுதம்
சுரக்க வைக்கும்
ஊற்றான நிலம்….
செய்த தவம் நாம் ஏதோ ….
எட்டுத்திசையும் பேரொலி முழங்கிட….லண்டன் மாநிலத்தில்
ஈஸ்ட்காம் நல்லகத்தினில்
கலையகம் நுழைந்த பேறு …ஆண்டுகள் இருபத்தைந்தினை நிறைத்த வலிமை…கூட்டுச்சேர்வினில் இல்லறத்தரசியோடு கண்ணிமைக்குள் காக்கும் செல்லமகள் தியாகம்….
நம்மாலான கடைமை நானிலமுள்ளவரை கரம்கோர்த்து
நன்றி நவிலலாக
தொடரும் பணியை வாழ்த்திப் போற்றிடுவோம்…
வாழ்க..
வாழ்க…
வாழ்க..
– சர்வேஸ்வரி கதிரித்தம்பி

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading