சர்வேஸ்வரி சிவரூபன்

நிர்மூலம்
@@@@@@

சுதந்திரம் அந்தரம் நிரந்தரமானது நிர்மூலம்
தந்திரமும் தளைத்தது தவிடு பொடியும் ஆனதே
மந்திரம் தெரியாமல் மெளனத்தில் நின்றதே

காத்திரம் இல்லாமல் காசினியில் ஒற்றுமை நிர்மூலம்
பாத்திரம் தூக்கியும் பலனில்லை வெற்றிடம் அதுவும் நிர்மூலம்

எண்ணங்கள் இசைந்தாடின இணையாத பந்தங்கள் வாழ்வு நிர்மூலம்

ஏழைகள் பந்தாடப் பட்டனர் அவர்களுக்கு ஆதரவும் நிர்மூலம்

எத்தனை வகையிலே எத்தனை நிர்மூலங்கள்
வகைவகையாய் பிரித்தால் மனிதனுடைய வாழ்வும்
ஓர் நாள் நிர்மூலம் தானே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading