கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவிதை 1806

உழைப்பே உன்னதம்!

பொருளே ஆதாரம் என்றெண்ணி நாளும்
பொழுதை நிறைத்து
பெருமை சேர்க்க
உழைப்பே உன்னதம்
உயர்வு உத்தமம் ஆகும்

காலை விடியல் கண்டு
மாலை மயக்கம் நீக்கி
மண்ணில் உயிர்ப்பு தேக்கி
மலரும் பொழுதை உயர்த்த
உன்னத ஆசான்
உயரிய விருதே உழைப்பு!

விருப்பு நாடிச் செய்யும்
வியர்வை நாளும் சிந்தும்
உவகை தருமே உழைப்பும்
களைப்பில் கனிவது வரவே
உழைக்கும் கரமே வாழ்க!
சிவதர்சனி இராகவன்
3/5/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading