மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1838!

“வரப்புயர”..
புலம்பெயர் வாழ்வினிலே புகுந்தவை ஏராளம்
இழந்தவை தாராளம்
இருப்பவை மிகுதியிலே
புதிர்களின் தேரோட்டம்..

வரப்பு உயரவே
விலகுது உறவு நிலை
பெருகுது இடைவெளி
உருகுது அன்பு மனம்
இளகியே நில்லாமல்
இறுக்கமாய் இளையோர் மனம்..!

வரப்புகள் உயர
நீர் வளம் பெருகும்
ஔவை மொழி அன்று
வரப்புகள் இட்டு
சிறப்பினை இழக்கும்
சீரற்ற வாழ்வியல்
மாற்றமாம் இங்கு…!
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

    Continue reading