மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவிதை 1862!

எழுத்தறிவு இல்லையெனில்!

பெற்றவர் நமக்களிக்கும் பெருஞ்செல்வம் கல்வியன்றோ
பெற்ற பயன் நா நிலத்தில்
கண் திறக்கும் கல்விதானே
சிந்திக்க முடிந்த மிருகந்தான்
மனிதனென்று
சிறப்பான ஓர்மனிதன் உரைத்த செய்தி நாமறிவோம்!

கற்றலும் கற்றபடி நடத்தலுமே கடமையென்று
பெற்றகல்வி பெரு நன்மை தந்துவிடும்
நிச வாழ்வில்
உழைத்திடவும் ஊர்முன்னே தலை நிமிர்ந்து வாழ்ந்திடவும்
எழுத்தறிவு வேண்டுமென்று பள்ளிசென்று கற்றவர் நாம்..!

பட்டறிவு போதுமென்று பாரினிலே சிலருண்டு
பயன்கொடுக்கும் கல்வியது பல நன்மை தருவதாலே
இயன்றவரை பெற்றிடுவோம் இனிவரும் சந்ததியின்
நிலைதனையும் கற்றிட வைத்து உயர்த்திடுவோம்..!

எழுத்தறிவு இல்லையெனில் இருள் தானே வாழ்வுதானும்
பழுதாகும் பக்குவமும் ஏமாற்றி ஓடவைப்பார்
உலகினிலே ஆயிரமாய் எழுத்தறியா மனிதரிலே
பெண்ணினமும் தானுண்டு எழுகவே நீர் பெண்களுமே…!
சிவதர்சனி இராகவன்
6/9/2023

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading