பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவிதை 1862!

எழுத்தறிவு இல்லையெனில்!

பெற்றவர் நமக்களிக்கும் பெருஞ்செல்வம் கல்வியன்றோ
பெற்ற பயன் நா நிலத்தில்
கண் திறக்கும் கல்விதானே
சிந்திக்க முடிந்த மிருகந்தான்
மனிதனென்று
சிறப்பான ஓர்மனிதன் உரைத்த செய்தி நாமறிவோம்!

கற்றலும் கற்றபடி நடத்தலுமே கடமையென்று
பெற்றகல்வி பெரு நன்மை தந்துவிடும்
நிச வாழ்வில்
உழைத்திடவும் ஊர்முன்னே தலை நிமிர்ந்து வாழ்ந்திடவும்
எழுத்தறிவு வேண்டுமென்று பள்ளிசென்று கற்றவர் நாம்..!

பட்டறிவு போதுமென்று பாரினிலே சிலருண்டு
பயன்கொடுக்கும் கல்வியது பல நன்மை தருவதாலே
இயன்றவரை பெற்றிடுவோம் இனிவரும் சந்ததியின்
நிலைதனையும் கற்றிட வைத்து உயர்த்திடுவோம்..!

எழுத்தறிவு இல்லையெனில் இருள் தானே வாழ்வுதானும்
பழுதாகும் பக்குவமும் ஏமாற்றி ஓடவைப்பார்
உலகினிலே ஆயிரமாய் எழுத்தறியா மனிதரிலே
பெண்ணினமும் தானுண்டு எழுகவே நீர் பெண்களுமே…!
சிவதர்சனி இராகவன்
6/9/2023

Nada Mohan
Author: Nada Mohan