26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1866!
நல்லை நகரில் விழாக்கோலம்..!
ஆண்டுக்கு ஒருமுறையாய்
அழகாய் விழாக்கோலம்
நல்லைக் கந்தன் எழுந்தருளும்
இரதத்தின் உலாக்காலம்
ஆழியென அலைகடலென
ஆர்ப்பரிக்கும் பக்தர் கூட்டம்
அருள் மழையில் நனைந்தேகும்..!
சீர்பூத்த ஈழத்தில்
பேர் பொறித்த ஆலயம்
அன்று தலை நகராய் மிளிர்ந்த
வரலாற்றின் சான்றாதாரம்
தாய்மொழி அரசோச்சிய
அரியணை நல்லூராய் நின்று
ஆல்போல் வேரூன்றிய
பண்பாட்டின் மூலாதாரம்…!
ஏழை பணக்காரர் பேதமை
எள்ளளவும் இன்றியதோர்
ஏற்றத் தாழ்வற்ற பண்பும்
வீற்றிருக்கும் கந்தன் வீதியில்
எங்கள் ஈகையாளன் பார்த் தீபன்
நினைவெழும் புனித நாள்
வீழ்ந்திடும் பகைமையில்
வீழாதெழும் பண்பாடும் ஈகையும்..!
சிவதர்சனி இராகவன்
13/9/2023

Author: Nada Mohan
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...
24
Jun
வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்...