தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1866!

நல்லை நகரில் விழாக்கோலம்..!

ஆண்டுக்கு ஒருமுறையாய்
அழகாய் விழாக்கோலம்
நல்லைக் கந்தன் எழுந்தருளும்
இரதத்தின் உலாக்காலம்
ஆழியென அலைகடலென
ஆர்ப்பரிக்கும் பக்தர் கூட்டம்
அருள் மழையில் நனைந்தேகும்..!

சீர்பூத்த ஈழத்தில்
பேர் பொறித்த ஆலயம்
அன்று தலை நகராய் மிளிர்ந்த
வரலாற்றின் சான்றாதாரம்
தாய்மொழி அரசோச்சிய
அரியணை நல்லூராய் நின்று
ஆல்போல் வேரூன்றிய
பண்பாட்டின் மூலாதாரம்…!

ஏழை பணக்காரர் பேதமை
எள்ளளவும் இன்றியதோர்
ஏற்றத் தாழ்வற்ற பண்பும்
வீற்றிருக்கும் கந்தன் வீதியில்
எங்கள் ஈகையாளன் பார்த் தீபன்
நினைவெழும் புனித நாள்
வீழ்ந்திடும் பகைமையில்
வீழாதெழும் பண்பாடும் ஈகையும்..!
சிவதர்சனி இராகவன்
13/9/2023

Nada Mohan
Author: Nada Mohan