சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1893!

கார்த்திகை மலர்விலே…!

புனிதர்களின் நினைவேந்தி
உதிக்கும் திங்கள்
புலரும் காந்தள் மலர்
கைசேரும் எங்கும்
கருமுகில் முகம் தேடி
அலையும் தினம் தினம்
முளைக்கும் விடிவெள்ளி
சொல்லும் மாவீரர் நாமம்…!

நாடு மீட்கும் போரில்
தந்தார் உயிர் விதை
தேடும் உறவுகள் இன்னும்
தேம்பலில் உள வதை
எண்ண முடியாத தியாகம்
இவர் செய்தார்
எங்கள் விடியலுக்காய் கூவிய
வீரக் குயில்கள் இவர்…!
சிவதர்சனி இராகவன்
1/11/2023

Nada Mohan
Author: Nada Mohan