23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1904!
கல்லறை வீரரின் கனவிதுவோ..!
விழி மூடித் தூங்கும்
வீரர்களே நீவிர்
கண்ட கனவிதுவோ
நாம் எதை உரைப்போம்
தேசத்தின் விடியலுக்காய்
உயிர் அமுதைத் தந்தே
உறங்கும் மாவீரரே
உங்கள் கனவின் தீரம்
அறியாதவராய் நாமோ…!
ஒன்றுபட்ட ஓர் தேசம்
ஒற்றுமைப்பட்ட எம் இன
சுதந்திர வாழ்வு
அடிமைத் தழை ஒடித்து
அரக்கத்தனம் கொண்ட
எதிரியை எதிர்த்து
எத்தனை களங்களைக்
கண்டவர் நீவிர்…!
இன்றோ இலக்கு எது
என்பதும் அறியாதவராய்
வேற்றுமைப் பட்டு
வேரறுந்து நிற்கிறோம்
உங்கள் உதிரத்தின்
துளிகளுக்கு பதில்
தேடித் தவித்திருக்கிறோம்
விடியல் ஒன்று உம்மால்
நாம் பெறவேண்டும்
என்றே காத்திருக்கிறோம்..!
சிவதர்சனி இராகவன்
23/11/2023
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...