அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்... அறிவின் விருட்சமே... அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1787!

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்!

நீரும் வேண்டும்
வாழ்வின் தேட்டத்துக்கு
விளையும் பயிருக்கு
வானமுதம் நீராகும்
நீரைப் பேணி
அளவாய் அனுபவிக்க
உலகின் தேவையும்
உவப்பாய் நிறையும்!

உழைத்துச் சேர்க்கும்
பணத்தில் பாதி
உதவாது போதல்
என்ன நியதி
குப்பை தேங்கி
குவலயம் அழியும்
நிலையே நாளை
நிலைப்பது காண்போம்!!

கரையும் நீரைக்
கவனமாய்க் காத்து
நிறையும் கழிவை
நித்தம் குறைக்க
நன்மை கிட்டும்
நலவாழ்வு கைக்கெட்டும்!!
சிவதர்சனி இராகவன்
29/3/2023

Nada Mohan
Author: Nada Mohan