15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
சிவதர்சனி
வியாழன் கவி 1581!
உருமாறும் புதிய கோலங்கள்!
உருமாறும் புவி மீதில்
எத்தனை எத்தனை கோலங்கள்!
கருவாகி எருவாகும் வரை
மாறாது தொடரும் சாலங்கள்!
தரு மீதில் தவ வான் மீதில்
தகை நெறி மீதில்பரவும் மாற்றங்கள்
சிரம் மீதில் சிகரம் போலும்
ஏற்றம் பெறுமேஎழுச்சி கொள்ளுமே
கொறோனா என வொன்று
எமை வென்று உயிர் தின்றதே-பின்!
உரு மாற்றம் அதில் பல பரிமாணம்
ஊசியேற்றம் உள்ளத் தடுமாற்றம்!
பருவ மாற்றம் அபாய எச்சரிக்கை
அதன் பலாபலனோ பரிதாபம்!
உண்டாகும் போரின் ஆரம்பம்
உக்றைன் உக்கிரமாய்ப் பதற்றம்!
பனிகால இடமாற்றம் பரிமாறும்
விழி பற்பல அழகேற்றம் அரிதாரம்!
பணியோடும் பற்பல கற்பனை சேரும்! களிப்பு பொங்கும் கனியும்!
மனம் மீதில் மகிழ்வு பூக்கும்
மங்களம் பொங்கும் விழா சேரும்!
உருமாறும் புதிய கோலங்கள்
உணர்வாக்கும் உதட்டின் பூக்கள்!
சிவதர்சனி இராகவன்
17/2/2022

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...