“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1584!

ஓய்ந்து போகும் மனம்!!

ஓயாத அலைகள் போல என்றும்
எண்ணத்தின் சிதறல் இங்கே
ஓய்வொழிச்சல் இல்லாத் தன்மை
ஒரு நாள் ஓய்ந்து போகுமே!!

வாயாடி என்றே வரலாறு கண்டு
வரன்முறை தாண்டிப் பேசிய நாவு
வஞ்சம் இன்றிப் பஞ்சம் கொண்டு
கஞ்சத் தனம் காட்டுமே அமைதியாய்

துருதுரு வென்றே பார்த்த விழிகள்
தூண்டில் போட்டு இழுத்த நொடிகள்
தூர்வாராக் கிணறு போல் இருளும்
துன்பத்தை வாழ்வில் உணரும்!!

வீதிகள் எங்கும் தடங்கள் பதித்து
வீறு நடை போட்ட கால்கள்
சோர்வு கண்டு சோம்பிக் கிடக்கும்
சந்தடி யின்றித் தவித்து நிற்கும்!!
சிவதர்சனி இராகவன்
24/2/2022

Nada Mohan
Author: Nada Mohan