கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி-1613
சித்திகள் தருவாய் சித்திரையே!

எத்திக்கும் விடியல் எழுச்சி கொள்ள
ஏக்கங்கள் தாக்கங்கள் விலகிக்
கொள்ள
சித்திகள் தரவே பிறந்தனையோ
சித்திரையே இத்தரை மெல்ல வந்தாய்!!

வித்தகம் கொண்டே விதையிடவே
விருட்சமாய் வாழ்வு வளம் பெறவே
பங்குனி மங்கை சோதரியாய்
மலர்ந்தனையோ மாதவம் என்றிங்கே!!

முத்திரை ஒன்றை பெற்றிடவே
முகவரி தன்னை நிலை நாட்டிடவே
உந்தன் கரமும் பற்றி விட்டோம்
உயர்வாய் உலகை உயர்த்திடுவாய்!!
சிவதர்சனி இராகவன்
14/4/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading