“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1624!

உழைப்பின் உன்னதம்!

உழைத்துப் பிழைக்கும் உன்னத மானிடம்
உலகை ஆளும் உயரிய பீடம்
தழைக்கும் பயிரினம் பசுமை தேடும்
தன் நலம் நாடாது பிறருக்கு உதவிடும்!!

வியர்வை சிந்தும் நொடிகள் யாவும்
வீணாய்ப் போவது கிடையாதே
விழிப்பாய் நடக்கும் காலம் இங்கே
விதையாய் முளைக்கும் தருவாய் மாறும்!!

வல்லமை கொண்டு வறுமை விலக்க
வலிகள் தாங்கி உடலைத் தேற்ற
மானிடம் கண்ட மாண்பாம் உழைப்பு
மறந்து வாழ்தல் கீழ்மை காணும்!!

பணமும் பொருளும் ஆட்டிப் படைக்க
அதனின் வழியில் மனதும் ஈர்க்க
புதிய உலகை ஆக்கும் சக்தி
புதையல் போலும் உழைப்பால்
முடியும்!!
சிவதர்சனி இராகவன்
5/5/2022

Nada Mohan
Author: Nada Mohan