” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1624!

உழைப்பின் உன்னதம்!

உழைத்துப் பிழைக்கும் உன்னத மானிடம்
உலகை ஆளும் உயரிய பீடம்
தழைக்கும் பயிரினம் பசுமை தேடும்
தன் நலம் நாடாது பிறருக்கு உதவிடும்!!

வியர்வை சிந்தும் நொடிகள் யாவும்
வீணாய்ப் போவது கிடையாதே
விழிப்பாய் நடக்கும் காலம் இங்கே
விதையாய் முளைக்கும் தருவாய் மாறும்!!

வல்லமை கொண்டு வறுமை விலக்க
வலிகள் தாங்கி உடலைத் தேற்ற
மானிடம் கண்ட மாண்பாம் உழைப்பு
மறந்து வாழ்தல் கீழ்மை காணும்!!

பணமும் பொருளும் ஆட்டிப் படைக்க
அதனின் வழியில் மனதும் ஈர்க்க
புதிய உலகை ஆக்கும் சக்தி
புதையல் போலும் உழைப்பால்
முடியும்!!
சிவதர்சனி இராகவன்
5/5/2022

Nada Mohan
Author: Nada Mohan