10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சிவதர்சனி
வியாழன் கவி 1644!
பூமிப்பந்தில் நானும்!
பூமிப்பந்தில் நானும் ஒரு சுமை தானா
சுகம் காணாத் தேடல் வீணா
சுமை தாங்கி என்பது கண்கூடா
சுய விமர்சனம் காணல் முறை தானா!
மண்ணுக்குப் பாரமான வெற்றுடலா
மரணத்தின் கைதியான சீடனா
மாற்றங்கள் ஏற்றிடக் காத்திருப்பா
மாறாக் களத்திடைச் சுடுகுழலா!
பல்விதமாய்ச் சுழலுதிங்கே மனமது
பண்பிழந்து தவிப்பது உயிர்க்கூடு
கூடி வரும் ஒரு நாளும் அருகிலா
குவலயமே சொல்கிவிடு நான் பாரமா
காரணமும் உண்டே படைப்பினுக்கு
கருணை மனம் கொண்டால் மாந்தர்
பின்னும் ஏனிந்த துயரமெல்லாம்
துணிந்து நின்றால் ஓடாதோ பின்னால்!
தாங்கும் பூமியதை நாம் தாங்க வேண்டும்
தங்கிய கருவறையை சீர்தூக்க வேண்டும்
எங்குமிங்கே ஓருலகைக் காண
ஒன்றுபடல் இன் நாளில் போதும்!
சிவதர்சனி இராகவன்
14/7/2022

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...