” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1674!
வாழிய பல்லாண்டு!
பாமுகத்துச் சாரதியும்
பாங்கிணைந்த பூமகளும்
பாரினிலே வாழியவே
பல்லாண்டு பல்லாண்டு!

இருமனம் ஒன்றாகி
இன்பங்கள் துணையாகி
இணைந்தன இருபத்தொடு
இன்னும் ஆறு அகவைகள்!

முன்னே நீவிர் தடம்பதிக்கப்
பின்னே நாமெலாம் அணிவகுக்க
அன்பகலா மகவுடனே வாழிய
என்றும் பூமழை நாம்தூவ!

இல்லறம் காத்த வாணியும்
சொல்லறம் சேர்க்கும் மோகனும்
வெல்லும் நாட்கள் துணைசேர
வேளையிது பல்லாண்டு வாழியவே!
சிவதர்சனி இராகவன்
18/8/2022

Nada Mohan
Author: Nada Mohan