சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

நமசிவாயா எதற்கு..!?

கோயில்களெல்லாம்
அலங்கார உற்சவம்
கோப்பைகளேந்திய மனிதர்கள்
ஊர்வலம்
காத்திரமில்லையென்று- சிலர்
கையேந்தும் நிலையுமேனோ?

பாவப்பட்ட ஜென்மங்களை -இப்
பாரினில் சுமந்துவிட்டு- வீதி
ஓரம் விட்டெறிந்து
விளையாட்டாய் போனதாலே

தந்தையும் தாயும் தெரியாமல்
அனாதைகளென்ற பெயர்
பெற்றவரைப் பெற்றவர்கள்- இன்று
பின்புறம் தள்ளியதால்- பெற்றவர்
இன்று ஆச்சிரமத்தில் அகதிகள்

பெற்ற கடன் தீர்ப்பதற்கு பிள்ளைகள்
சிலர் இங்கில்லை
உற்ற கடன் தீர்ப்பதற்கு- சில
உறவுகளிற்கு வழியில்லை

சொத்துச் சுகம் , பணமிருந்தென்ன
சொந்தமெல்லாம் வேறுகூறாகி
நற்றுனையில்லை யென்றால்
நமசிவாய எதற்கு..!?

– கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி. இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan