அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்... அறிவின் விருட்சமே... அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி.

வீணர்கள் நிலை

குருவிக்கூட்டுக்கு கல்லெறிந்து பார்
குருவிகள் பறந்து விடும் -ஆனால்
நீ குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்து பார்
குளவிகள் கொட்ட வரும்

குணமறிந்து செயலற்ப்பட்டால் -ஒரு
குற்றமும் தெரியாது.
குறுக்கு வழியில் சாதிப்பேனென்று
கொப்பரம் தட்டி நின்றால்

தலை குனிந்து போகும் நிலையும்
வெகு தூரமில்லை.
நல்லவன் போன்று நப்பாசை போட்டு
வேடம் கட்டும் சிலர்- இன்று
நாடெல்லாம் பரவி நின்று
நர்த்தன மாடுகின்றனர்.

உண்மையாய் வாழ்கின்றோம்- என்று
ஓர் முழக்கம்
ஊர் வம்பை வேண்டி- அங்கு
ஒர் பதட்டம்
நல்லவரையும் பந்தாடும் கூட்டம்
நமனுக்குமஞ்சோமென ஓட்டம்

கல்நெஞ்சுக்காரர் செய்யுமாட்டம்
கருணையென்பது இல்லாத தேரோட்டம்
பூவையவள் பாரினிலே
பூகம்பமாய் நின்றாள்
பூம்புகாரா கண்ணகி போன்று
வீம்புகள் செய்யும் வீணர்
கூட்டத்தை
வீர மகளாய்த் தானெழுந்து
நீதியையுரைத்தாலும்-
வீணர்கள் நிலை……..?????

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan