சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி.

வீணர்கள் நிலை

குருவிக்கூட்டுக்கு கல்லெறிந்து பார்
குருவிகள் பறந்து விடும் -ஆனால்
நீ குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்து பார்
குளவிகள் கொட்ட வரும்

குணமறிந்து செயலற்ப்பட்டால் -ஒரு
குற்றமும் தெரியாது.
குறுக்கு வழியில் சாதிப்பேனென்று
கொப்பரம் தட்டி நின்றால்

தலை குனிந்து போகும் நிலையும்
வெகு தூரமில்லை.
நல்லவன் போன்று நப்பாசை போட்டு
வேடம் கட்டும் சிலர்- இன்று
நாடெல்லாம் பரவி நின்று
நர்த்தன மாடுகின்றனர்.

உண்மையாய் வாழ்கின்றோம்- என்று
ஓர் முழக்கம்
ஊர் வம்பை வேண்டி- அங்கு
ஒர் பதட்டம்
நல்லவரையும் பந்தாடும் கூட்டம்
நமனுக்குமஞ்சோமென ஓட்டம்

கல்நெஞ்சுக்காரர் செய்யுமாட்டம்
கருணையென்பது இல்லாத தேரோட்டம்
பூவையவள் பாரினிலே
பூகம்பமாய் நின்றாள்
பூம்புகாரா கண்ணகி போன்று
வீம்புகள் செய்யும் வீணர்
கூட்டத்தை
வீர மகளாய்த் தானெழுந்து
நீதியையுரைத்தாலும்-
வீணர்கள் நிலை……..?????

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan