சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

ஆறு மனமே !
*****************************

அரியாசனமேறித் தானிருந்தாலும்.
அறுசுவையுணவை உண்டிருந்தாலும்.
ஆகாயவானில் பறந்திருந்தாலும்.
ஆறாதரணமொன்று வந்திடுமே.

சுகபோகவாழ்வில் மூழ்கினாலும்.
சுகந்தக் காற்றை நுகர்ந்திடலாம்.
சோலைக் குயில் போல் பாடிடலாம்.
சோககீதமொன்று
வந்திடுமே.

ஆறு அறிவை இறைவன்த தந்திருந்தாலும்
ஆனந்தவாழ்வில் மூழ்கியிருந்தாலும்
அடுத்துக் கெடுக்கும் மனிதர் கூட்டம்.
ஆற முடியாமல் தணலாக்கி விடுவார்.

நீதி வழுவாத நெறியில் நின்றும்
நீங்காத வடுவைத் தந்து நிற்பார்.
நாதியற்றவர் நாமில்லை யென்றாலும்
ஏனோ மனமும் ஆறாமல் துடிக்கும்.
ஆறு மனமே ஆறு என்று -அந்த
ஆண்டவனை நாடுவதே மனம்.

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி✍️✍️✍️✍️✍️✍️✍️✨️✨️✨️

Nada Mohan
Author: Nada Mohan