“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

நேசத்தின் ஆர்ப்பரிப்பில் நெஞ்சம் சிலிர்க்கிறதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

கண்ணும் கதைபேசும் காதலின்பம் கூடும் //
மின்னும் கதிரொளியே மிளிர்ந்தாய் என்னகம் //
வீசும் தென்றலே எனது சுவாசக்காற்றே //
வாசமலரே மிகையாக வந்தவளே நீயும் //
சிலையாக எனதுள்ளம் சிலநொடியில் கரைந்ததே //
உருக்கியும் வார்த்தானோ ஊடுருவிப் பாய்கிறாயே //
பெருக்கி விட்டாய் பெருமையும் கிடைத்ததடி //
நேசத்தின் ஆர்ப்பரிப்பில் நெஞ்சமும் சிலிர்க்கிறதே //
பாசத்தின் நிலையை பாங்காய் பரப்பினாய் //

ரீங்காரம் இடும் வண்டாகினேன் பூங்கொடியே //
ஆங்காரம் இன்றியே அணைப்பேன் கண்ணே //
சங்கீதமாய் சந்தோசமாய் வாழ்வோம் என்றுமே //

தங்கக் குடமே தளராத தளிரே //
வங்கக் கடலிலே விளைந்த வலம்புரியே //
சிங்கப் பெண்ணே செவ்விதழ் தேனே //
சீராட்ட வந்தவளே சிவகங்கையும் நீதானோ //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading