வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன்
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது
எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ?
இத்தரை வாழ்வு இனிமைகள் காண
முத்திரை பதிக்கும் சித்திரையே வந்துவிட்டாய்!!

காதோரம் கேட்கும் செய்திகள்
கணணி யுகத்தின் வன்முறையாய் மோதல்
எங்கு கேட்டாலும் போரும் பொழுதும்
வேரும் மக்களும் வெடித்தெழும் வன்மம்

சாதி வேறுபாடு சமயச் சண்டை
நீதியற்ற வாழ்வும் நிலைத்திட்டு
கற்பழிப்பு என்றும் வன்முறை யென்றும்
நிலைத்திடும் வாழ்வு சீரற்று இன்று

பொல்லாத போதையும் நிலையற்ற வாழ்வும்
இல்லாது மனிதரை கொன்றே செல்லும்
மதிகெட்ட வாழ்வில் மாண்புகள் இல்லை
பதியெங்கும் அவலக்குரல் பார்க்கும் வன்மமாய்!!

நகுலா சிவநாதன் 1851

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading