“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன்
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது
எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ?
இத்தரை வாழ்வு இனிமைகள் காண
முத்திரை பதிக்கும் சித்திரையே வந்துவிட்டாய்!!

காதோரம் கேட்கும் செய்திகள்
கணணி யுகத்தின் வன்முறையாய் மோதல்
எங்கு கேட்டாலும் போரும் பொழுதும்
வேரும் மக்களும் வெடித்தெழும் வன்மம்

சாதி வேறுபாடு சமயச் சண்டை
நீதியற்ற வாழ்வும் நிலைத்திட்டு
கற்பழிப்பு என்றும் வன்முறை யென்றும்
நிலைத்திடும் வாழ்வு சீரற்று இன்று

பொல்லாத போதையும் நிலையற்ற வாழ்வும்
இல்லாது மனிதரை கொன்றே செல்லும்
மதிகெட்ட வாழ்வில் மாண்புகள் இல்லை
பதியெங்கும் அவலக்குரல் பார்க்கும் வன்மமாய்!!

நகுலா சிவநாதன் 1851

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading