“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593)

வறண்ட பூமிக்கும்
காய்ந்த பயிர்களுக்கும்
உருகும் உயிர்களுக்கும்
ஊக்க சக்தியாய்
மழைத் துளிகள்

வாழ்வின் உயர்வுக்கு
உலகின் வளமைக்கு
செழிப்பான பாதையில்
வழி நடத்தும் உழைப்பின்
வியர்வைத் துளிகள்

வாழ்க்கைப் போராட்டத்தில்
வறுமைப் பிடியினிலே
உழல்வோரைக் காண்கையிலே
கருணையுடன் பொங்கி வழியும்
கண்ணீர் துளிகள்

வம்ச விருத்திக்கு வித்திடும்
உயிர்த் துளிகள்
கவலைகளின் மருந்தாய்
மழலைகளின் முத்தத்தின்
எச்சில் துளிகள்

துளிகளே தூறல்களாய்
தாங்கி நிற்கும் தூண்களாய்
வாழ்க்கையின் ஓட்டத்திலே
எதிர் நீச்சல் போடும் ஓடங்கள்
எத்தனையோ இப்பூவுலகில்
நன்றி…………..

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading