“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

காவியம் படைப்போம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நாளுமே நன்னெறி கற்றுமே நிற்போம் //
நாட்டிலே நன்மைகள் செய்துமே வருவோம் //
நல்லது தீயது அறிந்துமே கொள்வோம் //
நாளைய சந்ததிக்கு நல்வழியும் காட்டுவோம் //

வெற்றியும் தோல்வியும் வருவது சகயம் //
வெஞ்சினம் இல்லாத நெஞ்சினைப் பெறுவோம் //
வெட்டியாய் திரிவதை விட்டுமே நிற்ப்போம் //

வேளையும் இதுதான் ஒன்றாக இணைவோம் //

கவலையும் இன்றியே காப்பாய் கண்ணியம் //
கருத்து மோதலின்றியே ஏற்ப்பாய் சமாதானம் //

கடமையும் ஓங்கிடப் பாதையும் பார்ப்பாய் //
காலத்தில் நீயும் காவியம் படைப்பாய் //

ஆதலினால் காதல் செய்வீர் வாராய் //
ஆகாயம் பூமியும் பொறுமையின் சிகரம் //
ஆணவம் இன்றியே அகிலத்தை ஆழ்வாய் //

ஆணித்தரமான அறத்தையும் அகத்தினில் கொள்வாய் //
ஆனந்த கீதமும் இசைக்கும் நாட்டிலே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan