சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

காவியம் படைப்போம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நாளுமே நன்னெறி கற்றுமே நிற்போம் //
நாட்டிலே நன்மைகள் செய்துமே வருவோம் //
நல்லது தீயது அறிந்துமே கொள்வோம் //
நாளைய சந்ததிக்கு நல்வழியும் காட்டுவோம் //

வெற்றியும் தோல்வியும் வருவது சகயம் //
வெஞ்சினம் இல்லாத நெஞ்சினைப் பெறுவோம் //
வெட்டியாய் திரிவதை விட்டுமே நிற்ப்போம் //

வேளையும் இதுதான் ஒன்றாக இணைவோம் //

கவலையும் இன்றியே காப்பாய் கண்ணியம் //
கருத்து மோதலின்றியே ஏற்ப்பாய் சமாதானம் //

கடமையும் ஓங்கிடப் பாதையும் பார்ப்பாய் //
காலத்தில் நீயும் காவியம் படைப்பாய் //

ஆதலினால் காதல் செய்வீர் வாராய் //
ஆகாயம் பூமியும் பொறுமையின் சிகரம் //
ஆணவம் இன்றியே அகிலத்தை ஆழ்வாய் //

ஆணித்தரமான அறத்தையும் அகத்தினில் கொள்வாய் //
ஆனந்த கீதமும் இசைக்கும் நாட்டிலே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan