சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் ____50

“பரவசம்”

பொட்டு வைத்தே பூ வைத்தே
தலைவாரி அழகு பார்த்து
அணைக்கும் என் அக்கா!!

பாடம் சொல்லி தருவாள்
பாட்டும் கற்று தருவாள்
தடியால் அடிக்க மாட்டாள்
தந்திரமாய் நடந்து கொள்வதை பார்த்து பரவசம்!!

அழகு சட்டை
என் அழகுக்கு ஏற்ற வர்ணம்
தானே உற்றுநோக்கி
ஊர்ந்து போய் வாங்கி வருவாள்!!

இசையும் கதையும் கேட்பாள்
இசைந்தே எமக்கு சொல்லிடுவாள்
இயன்ற வரை ஈடுபாடு காட்டியே
ஈகம் உடன் நடந்து கொள்வாள்!!

நான்கு ஆண்டின் பின்
ஓன்றிணைவு
ஓடி ஆடி திரிகின்றோம்
பயண தடையை உடைத்து
விண்ணூந்தில்
வந்தடைந்தாள்
விண்ணதிரும் பேரின்பம்!!

பரவசமாய் பார்க்கின்றேன்
பாமுக பூக்கள்
நூல் வெளியீட்டில்
பக்குவமாய் அமர்ந்திருந்தாள் பண்புடன்
பரவசம் பரவசம்!!
நன்றி
சிவாஜினி சிறிதரன்
23.01.22

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading