நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே

ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின் திரையும் அழகே
துள்ளியே பாயும் மீன்களின் உற்சாகம்

அள்ளியே எடுக்க ஆவலும் தூண்டுதே
கைநழுவும் போதில் காதலும் கூடியது

பூமியின் விரிவாக்கம் பூக்கும் மிகையாய்
அன்னையின் மடியிலே தவழும் நினைவுகளே
காட்சியும் காணமுமாய் காற்றின் ரீங்காரம்
அசத்தலான பயணம் ஆசையில் மிதக்குதே

சிவரூபன் சர்வேஸ்வரி