ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே

ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின் திரையும் அழகே
துள்ளியே பாயும் மீன்களின் உற்சாகம்

அள்ளியே எடுக்க ஆவலும் தூண்டுதே
கைநழுவும் போதில் காதலும் கூடியது

பூமியின் விரிவாக்கம் பூக்கும் மிகையாய்
அன்னையின் மடியிலே தவழும் நினைவுகளே
காட்சியும் காணமுமாய் காற்றின் ரீங்காரம்
அசத்தலான பயணம் ஆசையில் மிதக்குதே

சிவரூபன் சர்வேஸ்வரி

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading