” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

” தேனிசை வேந்தன் “

ரஜனி அன்ரன் (B.A) ” தேனிசை வேந்தன் ” 30.04.2026

தமிழுக்காய் முழங்கிய தேனிசைக்குரல்
தமிழின விடியலுக்காய் கூவியகுரல்
மண்வாசனையோடு புரட்சிக் கானங்களை இசைத்து
ஈழக்கனவை உலகறியச் செய்தகுரல்
ஈழவிடியலுக்கு இசையினைச் சேர்த்தகுரல்
விண்ணுலகம் சென்றதுவே காற்றோடு காற்றாக !

உம்புரட்சி கீதங்களில்
அகதிஇனத்தின் வலியைக் கண்டோம்
மண்ணின் வீரச்செறிவைக் கண்டோம்
மரணபயத்தையே மறக்கவும் கொண்டோம்
எதைச்சொல்ல எதைவிட அத்தனையும் முத்துக்களே !

தேனிசையின் சகாப்தம்ஒன்று மெளனித்தது
விடியல்தீயை மூட்டியஇசை கலந்தது விண்ணோடு
தலைமுறைக்கு தமிழ்ப்பற்றை ஊட்டிய
தேனிசை வேந்தன் நிரந்தர அமைதி கொண்டாலும்
ஈழக்காற்றில் என்றும் இசையாய் கலந்து
தமிழினம் உள்ளவரை உம்தேனிசையும் ஒலிக்குமே !