நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___80

“கலைவாணி”

கல்வியும் கலையும்
தந்திடும் தேவியை
கூடியே நாமும்
பாடிடுவோம்!!

முப்பெரும் தேவியை
முன்னிறுத்தி
ஒன்பது நாட்கள் கொண்டாடுவோம்!!

புனிதம் புண்ணியம்
நிறைந்திடவே
நவராத்திரி விழாவை கொண்டாடுவோம்!!

சமஸ்கிருத வார்த்தையில்
சமரசமாய்
உருவெடுத்த வாணிவிழா!!

கல்வியா செல்வமா
வீரமா என தோரணயாய்
தொடுத்த விழா!!

கொலுசடுக்கி
கோலாகலமாய் ஆடி பாடி மகிழ்திடுவோம்!!

எத்தனை இரவுகள் வந்தாலும்
ஒன்பது இரவுக்கு ஈடேது

பாரெங்கும் பரவிய
தமிழரின் பார்பேற்றும் விழா வாணி விழா!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan