சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___80

“கலைவாணி”

கல்வியும் கலையும்
தந்திடும் தேவியை
கூடியே நாமும்
பாடிடுவோம்!!

முப்பெரும் தேவியை
முன்னிறுத்தி
ஒன்பது நாட்கள் கொண்டாடுவோம்!!

புனிதம் புண்ணியம்
நிறைந்திடவே
நவராத்திரி விழாவை கொண்டாடுவோம்!!

சமஸ்கிருத வார்த்தையில்
சமரசமாய்
உருவெடுத்த வாணிவிழா!!

கல்வியா செல்வமா
வீரமா என தோரணயாய்
தொடுத்த விழா!!

கொலுசடுக்கி
கோலாகலமாய் ஆடி பாடி மகிழ்திடுவோம்!!

எத்தனை இரவுகள் வந்தாலும்
ஒன்பது இரவுக்கு ஈடேது

பாரெங்கும் பரவிய
தமிழரின் பார்பேற்றும் விழா வாணி விழா!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading