பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 117

விடுமுறை களிப்பு

மகிழ்ச்சியின் உச்சம்
மகிழ்வான நாட்கள்
சின்ன வயதினிலே
மணல் வீடு கட்டி
விளையாடிய வீடு

2009 இல் இருந்து இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த எமது வீடு
எமது கிராமம் 2018
விடுவிக்க பட்டது அந்த
தாய்மனையில் விடுமுறை காலமதில் நின்றது மகிழ்ச்சி

நந்தி கடல் கடல் சார்ந்த வளம்
கடலை பார்க்க சென்று சுடச்சுட கடல் உணவு வேண்டி
சமைத்து உண்டோம்

வற்றாத பளையின்
பத்தாவது தரிப்பிடத்தில் தரிசனம் காட்டும் கண்ணகை அம்மனை பார்த்து தரிசனம் செய்தேன்

திரியாய் சென்று அம்மாவின் உடன் பிறப்புக்களை தரிசித்து
நிலாவெளியில் புறாதீவு
போய் போகும் வழியில் கன்னியாய் வென்நீர் ஊற்றில் உறவாடி மாவிள் கடக்கரையில் வெப்பத்தை தணிக்க குளித்து கோணேசர் கோயில் சென்று சிவனை தரிசித்து பத்திரகாளி அம்மனை பக்தியுடன் பார்த்து வணங்கி

கண்டி சென்று தேயிலை தோட்டம் தொழிற்சாலை பாத்து தேனீர் குடித்து
புத்த பெருமானின் தலதா மாளிகை பார்த்து உலக நூதனசாலை
நூணுக்கமாய் பாத்திட்டோம்
பேராதனை பூங்கா பொலிவுடன் றசித்தோம்
தாமரை கோபுரம் தன்னிறைவாய்பாத்து கொழும்பை
றசித்தோம்

தீவு பகுதிகளை ஒருநாளில் சுற்றி வந்தோம்
விடுமுறையின் களிப்பு
விதம் விதமாய் றசிப்பு
றிச்சாவை வெள்ளோட்டமாய் பார்த்தோம் சுவைமிக்க உணவு சுவைத்திட்டோம்

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading