சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம்_128
“எச்சம்”
மனித புதை
குளியின் எச்சம்
அச்சத்தில் மக்கள்
காணாமல் போனவர்கள்
புதைகுளிக்குள் எச்சமா!!

நாளை வருவான் என் மகன் என நம்பிக்கையுடன் காத்திருக்கும் தாய்க்கும் தந்தைக்கும்
புதைந்திருக்கும் மனித எலும்புக் கூடுதான் மிச்சமாய் மிதக்குமா!!

வெண்குடையுடன்
வெள்ளை உடையுடன் சென்ற
சாமாதான புறாக்கள் எல்லாம் எங்கே என கேட்டு கதறியழும்
மனைவிக்கு மக்களுக்கு என்ன பதில் கிடைத்திடுமே!!

விலங்குகளின் எச்சம்
பறவைகளின் எச்சம்
விலைவாசியில் உச்சம்
உரத்திற்கு
அதி உச்சம்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading