சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்__92
“புதிர்”
புதிருக்கு புது பொலிவு
பூத்திருக்கும் புதிர்
புன்னகை பூக்க
பாத்திருக்க வந்துசேரும்

காத்திருக்கும் புதிர்
கனிவான நெல்மணிகள்
நம் கண்மணிகள்
நம்மை மகிழ்வு படுத்தும்

நான் பார்த்த புதிர் எடுப்பு
தலப்பாகை கட்டி
வேட்டி உடுத்து
புது மாப்பிள்ளையாய் புதிர் எடுத்து வருவார் அப்பா

குத்து விளக்கு ஏற்றி
நிறை குடம் வைத்து
புது பொலிவுடன் பூத்திருப்பாள் அம்மா

புது நெல் கையால் உடைத்து
வாய் இனிக்க பொங்கல் செய்வார் அம்மா

வீட்டு வாசலில்
இரு பக்கமும்
புது கதிர் கட்டி அழகு பாப்பார் அப்பா

ஆனந்தமாய்
ஆடிப் பாடி
புது நெல்லின்
பொங்கல் உண்டு
மகிழ்ந்து உறவாடி நிற்போம் நாங்கள்!!

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading