பாசப்பகிர்வினிலே………!!
பாசப்பகிர்வினிலே……58
சிவா சிவதர்சன்
[ வாரம் 284 ]
“ஆசான்”
தாரமுங்குருவும் தலைவிதிப்பயன்
ஆசான் அமைதல் இறைவன்கொடுத்த வரம்
நாடெங்குமின்று இலவசக்கல்வி
முயற்சியுடை மாணவர்க்கு சிறந்தபெறுபேறு
ஆசிரியர் தம்கடமையை சரிவரநிறைவேற்றுகிறாரா?
தனியார் கல்விநிறுவனங்கள் பணம் குவிப்பது ஏன்?
அரசஆசிரியர்கள் தனியார்கல்விநிறுவனங்களில் கற்பிக்க அரசு தடை!
ஆசான் கற்பித்தலுடன் பல்வேறு துறைகளிலும் முன்னிலை வகிப்பவர்
சுயநலநோக்கமற்ற ஆசான்களின் தோற்றம்
சமுதாய முன்னேற்றத்தின் வெற்றியில் ஏற்றம்
பள்ளிக்காலத்தில் கற்பித்த ஆசிரியர்கள் மனதில் ஓட்டம்
நல்லாசிரியர் முகங்கள் நெஞ்சில் என்றும் நிழலாட்டம்
அவர்தம் அளப்பரிய சேவைகண்டு நன்றி பெருக்கெடுக்கும்
தமது குழந்தைகளாய் மாணவரை எண்ணிச்செயற்பட்டவர்
அவர் தமை இறைவனாய் எண்ணிப்போற்றுதல் தகும்
ஆதலால் ஆசான் மாணவர் வாழ்வில் வெற்றிஏணி!
“நன்றிமறவா அகில உலகமும் ஆசிரியதினம் கொண்டாடுகிறார்கள்.”
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
