“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 170 “மறுபிறவி”

மரணத்தைக் கண்டு மருண்டிடும் மனிதா
மரணம் ஒரு நாள் வந்தே தீரும் அஞ்சுதல் வேண்டா
உடல் என்பது உயிர் காவும் வெறுங்கூடு
அழிவில்லாத்து ஆன்மா, அழிவது உடல், கண்கூடு

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் மாந்தர்
பிறவாமை வேண்டின் பற்றது நீக்கி பரமனைப் பணிவாய்
ஆன்மா, மறுபிறவி வலியுறுத்தும் கீழைத்தேய மதங்கள்
சைவம் சமணம் பௌத்தம் மறு ஜென்மக்கோட்பாட்டில் அடக்கம்

கிரேக்க ஞானியர் பிளாட்டோ, அரிஸ் டோட்டில்,பைதகோரஸ்
மறுஜென்மக் கோட்பாட்டினை ஆய்ந்து போதனை செய்தோர்
எகிப்தியர் கட்டிய பிரமிட் மறுபிறவி உண்டென வலியுறுத்தும்
விஞ்ஞானமும் அறிவியலும் வளர வளர மறுபிறவி உண்மைகள் நிரூபணமாகும்.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan