சிவா சிவதர்சன்

வாரம் 175
“தீயில் எரியும் எம் தீவு”

எந்தையரும் அன்னியரும் ஆயிரமாண்டாய் போற்றிவந்த எமதருந் தீவு
இன்று கிரகணம் பீடித்த சூரியனாய் ஒளியிளந்து போனதேன்.?
தாயை விற்கும் தனயரின் ஆட்சியும் உழைக்காமல் உண்ண விழையும் குடிகளின் மாட்சியும்
நாடு நலங்கெட நாட்குறித்தலும் வேண்டுமோ.?

இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையம், இயற்கைத் துறைமுகம் கடலோடிகளின் பாதுகாப்புக் கவசம்.
சீனப்பட்டுக்கள் அலங்கரித்த மாளிகை உப்பரிகைகள்
இன்றோ கடன் வசூலிக்கும் சீனப்பட்டாளம் நாடு முழுதும்
கடல் நடுவில் எரிவது எம் தீவல்ல சிங்களவரின் ஆணவம்.

இயற்கை உவந்தளிக்கும் வளமோ தன்னிறைவு காணும்
இதற்கு மேலும் உனக்கென்ன வேணும்.!
காவி உடுத்து மடத்தில் உண்டுறங்கி “பிரித்” ஓது அதுபோதும்
மோட்டைத்தலை முடிகேட்பது பௌத்த நிந்தனை அறிவாய்.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading