மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 258

” மாறுமோ மோகம்”

நூறுநாள்ஓதி ஆறுநாள்விட தீருமாம்கல்வி எனும்ஞானம்
நாளில்பிறந்து நாட்பலசென்றாலும் தீருவதில்லை இந்தமோகம்
ஆசைகொண்ட பொருளைகைப்பற்ற நாடிச்செல்லும் வேகம்
அடைந்தாலும் தீராது எந்நாளுமிந்த மோகம்

ஆசைக்கும் அளவுண்டு ஆயுளுமுண்டு
பேராசைக்கு அளவு,ஆயுள் எனும் எல்லையேது
ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்
வள்ளுவரும் சொல்லிவைத்தார் அன்றே

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை என்றே
மேலும் மேலும் வளரும் ஆசையின் எல்லை
அவா இன்றேல் தவா இல்லை என்பதே உண்மை
பருவத்தில் வசந்தம்போல் மனிதவாழ்வில் இளமை

கொடிதினும் கொடிது இளமையில் வறுமை
மற்றவர் வசதிகண்டு மருண்டிடும் நெஞ்சம்
உழைத்தால் உயரலாம் எனஎண்ணாது கொஞ்சம்
படைத்தவன் படிஅளப்பான் என்றே பூரணதஞ்சம்

பாரதி சொன்ன பசித்திரு, அறிவுப்பசியில் மோகம்
தனித்திரு, துறையொன்றின் உச்சத்தைஎட்டும் மோகம்
விழித்திரு, அவதானித்து செயற்படும் மோகம்
இம்மூன்று மோகங்களுக்கும் முதலிடம் வழங்குவாய்

முதலெழுத்துக்கள் சுட்டும் பதவியைப்பெறுவாய்
“பதவி” உன்னை உயர்த்தும் உன்னால் மற்றவர் உயர்வார்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading