” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்ஷன்

வாரம் 191

“மழை நீர்”

மழைநீரே! மழை நீரே! விண்ணைத்தாண்டி வருவாயா?
விண்ணில் நீ உள்ளவரை பரிசுத்த தூய்மை காத்தாய்
என்று மண்ணில் விழுந்தாயோ அன்றே மாசடைந்து போனாய்
மண்ணில் உலவும் மாந்தரது குணங்கண்டு மாற்றமடைந்தாயோ?
கற்புடை மகளென உமைக்கருதியமை எங்கள் தவறோ?
நீயின்றி அமையாது உலகு என்பது மூதுரை
அறியாமை காரணமாய் இயற்கையைச் சீண்டுவோரின் பேதமை
பருவமுறைபேணி உயிர்களுக்கெல்லாம் உணவளித்தமை உன் தாய்மையின் பெருமை
பாரில் உன்பார்வை படாத நிலங்களைப்பார்,வரண்டு பாலைவனங்களாகின்றன
அங்கே உன் சீற்றத்தைக்காட்டு,பாலையும் சோலையாகும்
விளைந்து வீடு வரவிருந்த வேளாமை வெள்ளம் கொண்டுசெல்லல் முறையோ?
மனித குலம் தன்தவறை ஒருபோதும் உணராது, தாயவள் நீ மன்னித்து இந்த மக்களை வாழவை!
இயற்கையோடொட்டி இயல்பாய் மனிதன் வாழ்ந்திருந்தால் உலகும் குறையின்றி வாழும்,உன் சீற்றமும் தணிந்திருக்கும்.

Nada Mohan
Author: Nada Mohan