சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 178

பாமுகம்

வானொலியாய் வான்பரப்பில் வலம் வந்து
பாமுகமாய் மலர்ந்து ஓளி வீசுகின்றது
பலமுகங்கள் அறிமுகத்தால் ஆற்றல் பெறுகின்றது
பன்முகத் திறமைகள் வெளிவருகின்றது

கடந்து வந்த பாதையோ மிகக் கடினமானது
வார்த்தைக்குள் அடங்காத வலிகள் நிறைந்தது
வைராக்கியமே இன்று வரை வழிநடத்துகின்றது
உற்ற துணையும் உறுதுணையாக நிற்கின்றது

ஆண்டுகள் இருபத்தைந்து நிறைவானது
தனித்துவத்தால் தலைநிமிர்ந்து நிற்கின்றது
எதிர்காலச் சந்ததிக்கு நல்வழி காட்டுகின்றது
இலட்சியப் பயணம் நன்றே தொடர்கின்றது

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
12-06-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading