16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 23-06-2022
ஆக்கம் – 39
மீளெழும் காலம்
காலம் காலமாய் தொடரும்
உள்நாட்டுப் போர்களாலும்
கொடூர ஆட்சியாளர்களாலும்
அகதியாகின்றார்கள் மக்கள் உலகமெங்கும்
அகதியெனும் ஓற்றைச் சொல்
ஆயிரம் வலிகள் சுமக்கும்
இழப்பதற்கு ஏதுமின்றி நிற்கும் போது
உலகமே இருள் சூழ்ந்து சூனியமாகும்
தாய் மண்ணை விட்டு தாயை தவிக்க விட்டு
ஊரைப் பிரிந்து உறவுகளைப் பிரிந்து
உயிர்காக்க பல நாடுகளை தேடி-இன்றும்
அலைந்து திரிகின்றார்கள் இந்தக் கணம்வரையிலும்
வாழ்க்கையே போராட்டக்களமாகும்
காலங்களே காயங்களை ஆற்றும்
மீளெழும் காலத்தை உருவாக்குவோம்
அகதியெனும் சொல்லை அகராதியில் நீக்குவோம்
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
21-06-2022

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...