நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

துரோகம்
**********
துணையென மகிழ்ந்திடத் துலங்குவர் நடிப்பினால்
இணைந்திடல் நலமென இயம்பிடும் மனத்தினுள்
அடக்கிடும் வலிமையை அறிவொளி தருமெனின்
முடக்கிடும் வலிமையின் முனைப்பினை அறியலாம்
நம்பிடும் கணமெலாம் நரிகளின் வருகையால்
எம்பிடத் தடுப்பதும் ஏற்றதாய் உரைப்பதும்
நினைவுகள் பெருகியே நிலைகளை உணர்த்திட
வினைகளின் பிடிதனில் விழுவதும் துரோகமே!

Nada Mohan
Author: Nada Mohan