செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

துரோகம்
**********
துணையென மகிழ்ந்திடத் துலங்குவர் நடிப்பினால்
இணைந்திடல் நலமென இயம்பிடும் மனத்தினுள்
அடக்கிடும் வலிமையை அறிவொளி தருமெனின்
முடக்கிடும் வலிமையின் முனைப்பினை அறியலாம்
நம்பிடும் கணமெலாம் நரிகளின் வருகையால்
எம்பிடத் தடுப்பதும் ஏற்றதாய் உரைப்பதும்
நினைவுகள் பெருகியே நிலைகளை உணர்த்திட
வினைகளின் பிடிதனில் விழுவதும் துரோகமே!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading