சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

நிர்மூலம்

ஊரோடு ஓடிய
அவலம்
வேரோடு அழித்த
கோலம்
சீர்ரொடு வாழ்ந்த
பந்தம்
சின்னா பின்னாய்
சொந்தம்

விரும்பி உறவுகள்
காத்து
விழிமூடா வலிகளை
சுமந்து
வானமும் மழையாய்
பொழிந்து
மண்ணும் நிர்மூலம்
ஆனது

கொத்தாய் உயிரும்
அழிப்பு
கொலையாய் இதயத்
துடிப்பு
குருதியில் உடலும்
சிதைப்பு
இறுதியாய் ஆட்சி
அறிவிப்பு

கட்டிய கல்லறைகள்
மாயம்
களவாணிகள் செயலால்
காயம்
சிங்களம் மறந்ததா
நேயம்
சீற்றத்தால் அழித்த
நிர்மூலம்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading