செல்வி நித்தியானந்தன்

நீர்க்குமிழி

விண்ணிலே மழையாய்
மண்ணிலே பிரசவித்து
வீட்டின் முற்றத்திலே
நீர்க்குமிழியாய் விழுவாயே

வெள்ளம் இருக்கும்போதும்
வெட்டென விழும்அழகும்
வீட்டின் பீலியால் வந்திடும்
நீரும் மகிழ்ச்சியாய்இருக்கும்

நீர்விழும் அழகை ரசிப்பதும்
நீயா நானாபோட்டி போட்டு
பாத்திரம் வைத்து சேகரிப்பதும் மனதுக்கு மகிழ்வை உண்டாக்கும்

நீர்க்குமிழி என்றாலே
நாகேஸ் நடிப்பு நிழலாடுமே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan