18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
ஜதுர்ஷிகா விஜயகுமார்
கண் அழகி நீயே பெண்ணே
****~~~~~****~~~~~****~~~~~
தெளிந்து ஓடும் நீரிலே
தத்தி நீந்தும்
சிறு மீனை
போல,
உன் அழகு
முகத்திலே நீ
சிமிட்டும் உன்
கண்ணை பார்.
வானம் சூழ்ந்து
நிற்கும்
கார் மேகம்
போல,
அந்த கருவிழி
கண்ணினாலே
என்னை முழுதாய்
சூழ்ந்து கவர்ந்தவளே
இந்த ஒரு
ஜென்மம் போதும்
உன் கண்ணழகை
இரசிக்க மட்டும்
என்ன மாயம்
செய்தாயோ நீ
ஏனோ தெரிய வில்லை,
உன் கண்ணை
மட்டுமே தேடுகிறது
என் கண்கள்.
நீ புருவம்
தூக்கி கோபித்தாலும்
இன்னும் உன்
அழகு கூடுதே.
பெண்ணே உன்
கண் அழகின்
ரகசியம் எதுவென
எனக்கு சொல்வாயா?
*********
ஜதுர்ஷிகா விஜயகுமார்
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...