ஜெபா ஶ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-19

10-10-2023

அலை ஓசை

கரை வரும் அலைபோல்
கரைந்து போக சோகங்கள்
நிரையாய் முயற்சிகள் நீயும் முயன்று
நரை வந்தாலும் நடைமுறையாக்கு!

அலைகளின் ஓசை ஓயாது ஒலிக்க மனங்களில் புன்னகை நிலைக்க
மலை உயரமாய் கனவதுயொலிக்க
நிலைபெற நீயும் உழைப்பாய்!

நீண்ட கடலுக்கு அலைஓசை அழகு
கொண்ட வாழ்விற்கு நீ காட்டும் அன்பழகு
மீண்ட உயிருக்கு வேண்டிய உணவழகு
எம் தேசம் மீண்டெள வேண்டும் ஒரு அரசன்!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading