” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஶ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-19

10-10-2023

அலை ஓசை

கரை வரும் அலைபோல்
கரைந்து போக சோகங்கள்
நிரையாய் முயற்சிகள் நீயும் முயன்று
நரை வந்தாலும் நடைமுறையாக்கு!

அலைகளின் ஓசை ஓயாது ஒலிக்க மனங்களில் புன்னகை நிலைக்க
மலை உயரமாய் கனவதுயொலிக்க
நிலைபெற நீயும் உழைப்பாய்!

நீண்ட கடலுக்கு அலைஓசை அழகு
கொண்ட வாழ்விற்கு நீ காட்டும் அன்பழகு
மீண்ட உயிருக்கு வேண்டிய உணவழகு
எம் தேசம் மீண்டெள வேண்டும் ஒரு அரசன்!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan