02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-28
19-03-2024
பெண்மையைப் போற்றுவோம்
பாரதி கண்ட கனவே
எம்மினத்தின் புதுமையே
பரந்த உலகில் பயணிக்கின்றாய்
பயணம் மேலும் தொடரட்டுமே!
ஆணினம் உன்னை அடக்கவில்லை
அடங்கிப் போபவளும் நீயல்ல.
அறிவென்பது உனக்கு ஆயுதமல்லவா
அதை புகட்ட வலியுடன் போராடு நீ!
குடும்பம் தழைக்க உரமிடுபவளே
குத்துவிளக்காய் ஒளி தருபவளே
மெழுகுவர்த்தியாய் உருகுபவளே
பெண்மைக்கு ஈடாய் ஏது இங்கு?
சாதிக்க துடிப்பவளும் நீயல்லவா
சாதனை புரிபவளும் நீயல்லவா
பல்வேறு துறைகளில் ஆளுமைகளும்
வெற்றியும் தெரியுது வீர மங்கையாய்!
தமிழ் இனமே! மடியிருத்திய அன்னையை
வலுவான கைகளில் தாங்கிக் கொள்.
குலவிளக்காய் ஒளி வீசும் மனைவியை
இதயக் கோவிலுக்குள் பூட்டி வை!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...