19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-36
14-05-2024
குருதிப்புனல்
எம் கனவுதேசம்
கையை விட்டு
கடந்து போன காலம்
கொஞ்சம் நினைக்க
நெஞ்சம் பதறுதே..
இழந்த உரிமைக்காக
விடுதலைக்காக
சுயமரியாதைக்காக
குரல் கொடுக்க
ஒடுக்க இனப்படுகொலைகள்
கடல் சூழ் முள்ளிவாய்க்கால்
தொடரல் நிலத்தில்
கடல் போலச் சனங்கள்
குருதிப்புனலாக
நகர்ந்த நாளிது
இளையவர், முதியவருமாய்
குஞ்சுகளும், பிஞ்சுகளுமாய்
தஞ்சம் புகுந்த இடத்திலே
நெஞ்சங்கள் பிளந்து
அழிந்தது எம் இனம்
மரண ஓலங்கள் ஒலித்தது.
அழுகுரல்கள் காதை பிளந்தன
நந்திக்கடல், குருதிப் புனலாய்
அலை பாய அந்நியதேசம்
அமைதியும் காத்த மே 18.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...